சஜித்தின் அரசாங்கம் வந்தால் நாளை எரிபொருளை கொண்டு வரலாம்

Date:

சஜித் பிரேமதாச தலைமையில் சர்வகட்சி அரசாங்கம் அமைக்கப்பட்டால் எண்ணெய் நெருக்கடிக்கு விரைவில் தீர்வு காண முடியும் என பாராளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கீகாரம் இல்லை என சுட்டிக்காட்டியுள்ள ராஜித சேனாரத்ன, இவ்வாறான நிலையில் இலங்கைக்கு ஆதரவளிக்க எந்தவொரு நாடும் அல்லது சர்வதேச அமைப்பும் முன்வராது எனவும் தெரிவித்துள்ளார். அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைத்து நாட்டில் அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச சமூகத்திற்கு சாதகமான செய்தியை வழங்குவதே ஒரே தீர்வு என அவர் தெரிவித்துள்ளார்.

சர்வகட்சி அரசாங்கம் அமையும் பட்சத்தில் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து எரிபொருளை சலுகைக் கடன்களின் கீழ் இறக்குமதி செய்யும் வாய்ப்பும் இலங்கைக்கு மத்திய கிழக்கு நாடுகள் மட்டுமன்றி ஐரோப்பிய நாடுகளின் ஆதரவும் கிடைக்கும் என்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஷம்மி சில்வாவை அகற்றும் முடிவு பொய்

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் ஷம்மி சில்வாவை அந்த பதவியில் இருந்து...

1000 கோடி தர முடியாது – சட்டத்தின் ஊடாக மோதி பார்ப்போம்!

விவசாயம், நிலம், பாசனம் மற்றும் கால்நடை வளங்கள் அமைச்சர் கே.டி. லால்காந்தின்...

NDB விவகாரம் CID அலசல்!

நம்பகமான தகவல்களின் படி, தேசிய அபிவிருத்தி வங்கி பிஎல்சி (NDB)யில் இடம்பெற்றதாக...

மன்னிப்பே கிடையாது!

தனது சொத்து மற்றும் கடன் அறிக்கைகள் தொடர்பாக பொய்யான செய்திகளை வெளியிட்ட...