இராமேஸ்வரத்தில் கைதான புத்தளம் மீனவர்கள் விளக்கமறியலில்!  

Date:

இந்தியாவின் இராமேஸ்வரத்தில் கைதான புத்தளத்தைச் சேர்ந்த மீனவர்கள் இருவரும் எதிர்வரும் ஜூலை 5 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தளத்தில் இருந்து மீன்பிடிக்கப் புறப்பட்டு திசை மாறிப் பயணித்துவிட்டதாகக் கூறி புத்தளத்தைச் சேர்ந்த இருவர் இராமேஸ்வரம் கடற்கரையில் நின்ற வேளை தமிழகப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர். இருவரும் திசைமாறிப் பயணித்தனர் என்று தெரிவித்தபோதும் தமிழகப் பொலிஸார் அவர்கள் மீது சந்தேகம் கொண்டனர்.

இருவரும் பயணித்த படகில் எந்தவொரு மீனோ அல்லது மீன்பிடி உபகரணங்களோ காணப்படாததோடு இரு காண்களில் 55 லீற்றர் எரிபொருளும் காணப்பட்டுள்ளது. அதனால் தமிழகப் பொலிஸார் அவர்கள் இருவர் மீதும் அதிக சந்தேகம் கொண்டனர்.

மேற்படி இருவரும் தீவிர விசாரணைகளின் பின்னர்  நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு எதிர்வரும் ஜூலை 5ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதையடுத்து இருவரும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...