உருவ பொம்மை எரித்து கொழும்பில் இ.தொ.கா. ஆர்ப்பாட்டம்!

Date:

அரசாங்கத்தினால் அங்கீகரிக்கப்பட்ட தோட்டத் தொழிலாளர்களுக்கான 1,700 ரூபா நாளாந்த சம்பளத்தை வழங்குமாறு கோரி, தோட்டத் தொழிலாளர்கள் குழுவொன்று கொழும்பில் உள்ள இலங்கை தோட்ட அதிகார சபையின் சங்க அலுவலகத்துக்கு முன்பாக இன்று (9) ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.

தோட்டத் தொழிலாளர்கள் அலுவலகத்துக்குள் வலுக்கட்டாயமாக நுழைய முற்பட்டபோது, தொழிலாளர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அதன் பின்னர், பொலிஸ் கலகத் தடுப்புப் பிரிவினரும், தண்ணீர் பீச்சு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

அதன் பின்னர், கொழும்பு 7 இல் அமைந்துள்ள பாராளுமன்ற உறுப்பினரும் வர்த்தகருமான தம்மிக்க பெரேராவின் வீட்டுக்கு முன்பாக ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தம்மிக்க பெரேராவின் வீட்டுக்கு முன்பாக புகைப்படங்கள் மற்றும் எதிர்ப்பு பதாகைகளை எரித்தனர். இதையடுத்து தோட்ட தொழிலாளர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...