9 தமிழக மீனவர்கள் கைது

Date:

தமிழ்நாடு மாநிலத்தில் வசித்து வரும் மீனவர்கள், வங்கக்கடல் பகுதியில் மீன்பிடிக்கும்போது, இலங்கை கடற்படை மீனவர்களுக்கு எதிரான தாக்குதலை நடத்தி வந்த செயல்கள் முந்தைய நாட்களை போல இல்லை.

எனினும், தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது செய்யப்படுவதும், அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் தொடருகின்றது.

இந்நிலையில், இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள இராமேஸ்வரம் பகுதியை சேர்ந்த 9 மீனவர்கள், இன்று நெடுந்தீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டு இருந்தனர்.

அச்சமயம் அங்கு வந்த இலங்கை கடற்படை அதிகாரிகள், தமிழக மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன்பிடித்ததாக கைது செய்து அழைத்துச்சென்றனர்.

இவர்கள் அனைவரும் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மீனவர்களை விரைந்து அழைத்து வரவேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர்களின் உறவினர்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...