Monday, May 6, 2024

Latest Posts

அநுர அணி தவிர்ந்த ஏனைய கட்சிகள் இன்றைய சர்வகட்சி கூட்டத்தில் பங்கேற்பு

தேசிய நல்லிணக்க வேலைத்திட்டம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ள சர்வகட்சி மாநாட்டில் தமது கட்சி இணையவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.

சர்வகட்சி மாநாடு இன்று (26) நடைபெறவுள்ளதுடன், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, சுதந்திர மக்கள் பேரவையை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதில் தமது கட்சி பங்கேற்கப் போவதில்லை என தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர் சுனில் ஹதுன்நெத்தி தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.