ஹொரணையில் புதிய சிறைச்சாலை

Date:

வெலிக்கடை சிறைச்சாலை அமைந்துள்ள காணியின் வர்த்தகப் பெறுமதி 32 பில்லியன் ரூபா என நீதி மற்றும் சிறைச்சாலை விவகார இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமையை கருத்திற் கொண்டு ஹொரணையில் நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான 200 ஏக்கர் காணி சிறைச்சாலை திணைக்களத்திற்காக சுவீகரிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹொரணையில் சிறைச்சாலை அமைப்பதற்கான செலவை 18 பில்லியன் ரூபாவுக்கு மிகாமல் திட்ட அறிக்கைகளை பெற அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

“சர்வதேச டெண்டர் அழைப்பின் மூலம் அனைத்து நவீன வசதிகளுடன் திட்டத்தை முடிக்க நாங்கள் நம்புகிறோம். புதிய சிறை தற்போது இருக்கும் சிறையை விட நான்கு மடங்கு பெரியது” என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

இது தவிர, திறந்தவெளி சிறைச்சாலை முறையை மேம்படுத்துவதற்கும், சிவில் குற்றவாளிகளுக்கு புவிசார் குறியிடல் முறையை அறிமுகப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...