பொது போக்குவரத்திற்காக பயன்படுத்தப்படும் சில வாகனங்களுக்கு விதிக்கப்பட்ட இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்தி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பேருந்துகள், லொறிகள், டேங்கர்கள் மற்றும் பாரவூர்திகள் மீதான இறக்குமதிக் கட்டுப்பாடுகள் நிதியமைச்சினால் அறிவிக்கப்பட்ட வர்த்தமானி மூலம் தளர்த்தப்படும்.
இதேவேளை, நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், மேலும் பல பொருட்களின் இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது தொடர்பான பிரேரணைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இறக்குமதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது மாற்று விகிதங்களில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் என பல பொருளாதார ஆய்வாளர்கள் எச்சரித்துள்ள பின்னணியில் மேற்கண்ட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.