உள்ளாட்சித் தேர்தலை நடத்தும் அதிகாரம் இப்போது எங்களிடம் உள்ளது-தேர்தல்கள் ஆணைக்குழு

Date:

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதை ஒத்திவைக்கும் அதிகாரம் அமைச்சருக்கு இருப்பது நியாயமானதல்ல எனவும், அதனை தேர்தல்கள் ஆணைக்குழுவே நடத்த வேண்டும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் ஜீ.புஞ்சிஹேவா கூறுகிறார்.

இதன்காரணமாக உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைக்கும் அதிகாரத்தை தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சரின் அதிகாரங்களின் பிரகாரம் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதம் வரை பிற்போடப்பட்ட போதிலும், செப்டெம்பர் மாதத்தின் பின்னர் உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் இருக்கு எனவும், அதன் பிரகாரம் தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும் நடைபெறும் எனவும் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.

பல வருடங்களாக ஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை கூடிய விரைவில் நடத்த வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் வலியுறுத்துகின்றார். தேர்தல் முறை திருத்த தீர்மானம் காரணமாக மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படவில்லை எனினும் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பொதுச் சட்டத் திருத்தங்களின் ஊடாக பழைய முறைமையிலேயே தேர்தலை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழுவும் தெரிவுக்குழுவில் சுட்டிக்காட்டியுள்ளதாக கூறும் தலைவர், தேவையான சட்ட திருத்தங்களை மேற்கொண்டு மாகாண சபைத் தேர்தலை விரைவில் நடத்த வேண்டுமென என மேலும் குறிப்பிடுகின்றார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையின் அறிவிப்பு

தேசிய நூலக ஆவணவாக்கல் சேவைகள் சபையினால் செயல்படுத்தப்படும் வெளியீட்டு உதவிச் செயற்திட்டம்...

மாகாண சபை தேர்தல் குறித்து இந்திய தூதுவர் கருத்து

தமிழ் அரசியல் கட்சிகளுக்கு இடையே ஒருமித்த நிலைப்பாடு இருந்தால் மாத்திரமே மாகாணசபை...

ஹெரோயினுடன் கைதான பிக்கு தடுப்புக் காவலில்

ஹெரோயின் போதைப்பொருளை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் பிக்கு உள்ளிட்ட மூன்று பேரை...

சில இடங்களில் இன்றும் மழை

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும்...