Tuesday, September 17, 2024

Latest Posts

மஹிந்த விடுத்துள்ள எச்சரிக்கை

இந்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து விலகி வேறு முகாம்களில் இணைந்தவர்கள் மீண்டும் இணைத்துக் கொள்ளப்பட மாட்டார்கள் என கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“இன்று சிலர் அவநம்பிக்கையில் உள்ளனர். சிலர் குறுகிய நன்மைகளுக்காக எங்களை விட்டுவிட்டு வேறு முகாம்களைத் தேடிச் சென்றனர். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், ஒரு நாள் மீண்டும் எங்கள் முகாமிற்கு வர வேண்டி ஏற்படும்… (கட்சிக்காரர்களிடமிருந்து சத்தம்) இல்லையா? உனக்குப் பிடிக்கவில்லை என்றால் எனக்கும் பிடிக்காது.”

அநுராதபுரம் கட பனஹ பிரதேசத்தில் நேற்று (21) இடம்பெற்ற நாமல் ராஜபக்ஷவின் அங்குரார்ப்பண பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மஹிந்த ராஜபக்ஷ மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.