ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே கொலை: முன்னாள் எஸ்பி மற்றும் விடுதலைப் புலி உறுப்பினரை நீதிமன்றம் விடுதலை செய்தது

Date:

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளேவின் கொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு முக்கிய சந்தேக நபர்களை கம்பஹா மேல் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

கம்பஹா முன்னாள் பொலிஸ் அத்தியட்சகர் லக்ஷ்மன் குரே மற்றும் விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர் செல்வராஜா கிருபாகரன் எனப்படும் மொரிஸ் ஆகியோர் நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

முன்னாள் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே உட்பட 16 பேரை 2008 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 6 ஆம் திகதி வெலிவேரிய மைதானத்திற்கு அருகில் குண்டுத் தாக்குதல் நடத்தி கொலை செய்ததாக இரு சந்தேக நபர்களும் குற்றம் சாட்டப்பட்டனர்.

அப்போது கம்பஹா பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய லக்ஷ்மன் குரே இந்த குண்டுவெடிப்புகளுடன் நேரடி தொடர்பு வைத்திருந்ததாக குற்றம் சாட்டி 2009 ஆகஸ்ட் 12 அன்று கைது செய்யப்பட்டார்.

எனினும், கொலை வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது சந்தேக நபர்கள் இருவரையும் குற்றமற்றவர்கள் என உயர்நீதிமன்ற நீதிபதி சஹான் மாபா பண்டார விடுதலை செய்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இன்றைய வானிலை

நாடு முழுவதும் வடகீழ் பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக, வளிமண்டலவியல் திணைக்களம்...

பாரிய அளவு நிதி அனுப்பும் வெளிநாட்டு வாழ் இலங்கையர்கள்

‘இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும்’ நிதியம் இதுவரை வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்து கிட்டத்தட்ட...

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...