Friday, May 9, 2025

Latest Posts

மண்சரிவு எச்சரிக்கை

நாட்டின் சில பகுதிகளில் இன்று (03ஆம் திகதி) பெய்து வரும் கடும் மழை காரணமாக நான்கு மாவட்டங்களில் உள்ள 19 பிரதேச செயலகங்களுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது.

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின்படி, காலி மாவட்டத்தில் பத்தேகஹா, எல்பிட்டிய மற்றும் நாகொட பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன், வள்ளலாவிட்ட, பாலிந்தநுவர, மத்துகம மற்றும் களுத்துறை மாவட்டம் மற்றும் புலத்சிங்களவில் உள்ள இங்கிரிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இரண்டாம் நிலை எச்சரிக்கை அறிவிப்பும் பிராந்திய செயலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கேகாலை மாவட்டத்தில் ருவன்வெல்ல, புலத்கொஹுபிட்டிய, யட்டியந்தோட்டை, தெரணியகல மற்றும் தெஹியோவிட்ட ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், இரத்தினபுரி மாவட்டத்தின் கலவான கிரியெல்ல மற்றும் அயகம பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு முதல் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அஹெலியகொட, குருவிட்ட மற்றும் இரத்தினபுரி பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு இரண்டாம் நிலை மண்சரிவு அபாய எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அந்த பகுதிகளில் வசிப்பவர்களுக்கு கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் பாதுகாப்பாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலங்களில் இப்பிரதேச செயலகங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதால், அதிக மழை பெய்தால் மண்சரிவு அபாயம் குறித்து அவதானமாக இருக்கவும்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.