தெமட்டக்கொடையில் பயங்கர வெட்டுக் குத்து

0
72

தெமட்டகொட லக்ஹிரு செவன அடுக்குமாடி குடியிருப்பு மைத்திரி விகாரை வீதியில் ஆயிரம் பேர் காத்திருந்த வேளையில் ஆண் ஒருவரையும் அவரது சகோதரியையும் கூரிய ஆயுதங்களாலும், வாள்களாலும் தடிகளாலும் தாக்கிவிட்டு முச்சக்கர வண்டிகளில் 6 பேர் கொண்ட குழு தப்பிச் சென்றதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொலிஸார் அவர்களை விரட்டி தடியடி நடாத்தி கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர்களுடன் வந்த இரண்டு முச்சக்கர வண்டிகள், நான்கு வாள்கள், மூன்று மன்னா மற்றும் இரண்டு தடிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சம்பவத்தில் படுகாயமடைந்த 52 வயதுடைய நபரும் அவரது சகோதரியான 47 வயதுடைய பெண்ணும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here