ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் திலங்க சுமதிபாலவை அந்தப் பதவியில் இருந்து நீக்கும் திட்டம் இருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
திலங்க சுமதிபால ஜனாதிபதி ரணில் அரசாங்கத்தில் இணைந்து கொள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மேற்கொண்ட முயற்சிக்கு எதிராக நின்று அதற்கு எதிராக தயாசிறி ஜயசேகரவுடன் இணைந்து செயற்பட்டவர்.
இதன் காரணமாக, தயாசிறி ஜயசேகரவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டதுடன், அவர் கட்சியின் பொதுச் செயலாளர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார்.
முன்னாள் செயலாளர் நாயகம் மஹிந்த அமரவீரவினால் வழக்கு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
எனவே, திலங்கவை நீக்கி மீண்டும் அமரவீரவுக்கு வழங்குமாறு அரசாங்கத்தில் அமைச்சர்களாகப் பொறுப்பேற்றுள்ள ஸ்ரீலங்கா கட்சித் தரப்பிலிருந்து கட்சித் தலைவருக்கு தொடர்ச்சியாக கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வருவதாகக் கேட்கப்படுகிறது.