டயானா கமகே வீட்டில் ஒன்றுகூடிய அமெரிக்க தூதுவர் மற்றும் உயர் புள்ளிகள் முக்கிய பேச்சு

Date:

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வசிக்கும் தலவத்துகொட, அக்குரேகொடவில். வீட்டிற்கு சென்றிருந்தார்.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் அமெரிக்கத் தூதரகத்தின் இரண்டாவது பிரதிநிதியும் இணைந்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சரின் கணவர் கலாநிதி சேனக டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பல யோசனைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சரின் தனிப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...

இலங்கை மக்களாக நாம் எப்படி மீள்வது! – நளிந்த இந்ததிஸ்ஸ

என் அன்பான சக இலங்கையர்களே, ஒரு சோகம் என்பது நாம் தாங்கிக் கொள்ளும்...

இலங்கையின் கோரிக்கைக்கு IMF முன்னுரிமை

'திட்வா' புயலால் ஏற்பட்ட அழிவைத் தொடர்ந்து ஏற்பட்ட சவால்களை எதிர்கொள்வதற்காக, அவசர...