டயானா கமகே வீட்டில் ஒன்றுகூடிய அமெரிக்க தூதுவர் மற்றும் உயர் புள்ளிகள் முக்கிய பேச்சு

Date:

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங் கடந்த வெள்ளிக்கிழமை இரவு சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வசிக்கும் தலவத்துகொட, அக்குரேகொடவில். வீட்டிற்கு சென்றிருந்தார்.

அமெரிக்கத் தூதுவர் ஜூலி சுங்கிற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்தில் அமெரிக்கத் தூதரகத்தின் இரண்டாவது பிரதிநிதியும் இணைந்துள்ளார்.

இந்நிகழ்வில் அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க, இராஜாங்க அமைச்சரின் கணவர் கலாநிதி சேனக டி சில்வா ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் நாட்டில் சுற்றுலாத்துறையை மேம்படுத்த எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க பல யோசனைகளையும் ஆலோசனைகளையும் முன்வைத்துள்ளார்.

இந்நிகழ்ச்சியில் அமைச்சரின் தனிப் பணியாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சம்பத் மனம்பேரியை தடுத்து வைத்து விசாரிக்க உத்தரவு

முன்னாள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) பிரதேச சபை வேட்பாளர் சம்பத்...

சூதாட்ட வரி அதிகரிப்பு

1988 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்க சீட்டாட்டம் மற்றும் சூதாட்ட...

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...