செந்தில் தொண்டமானின் வீர செயலுக்கு மலேசிய பிரதமர் அலுவலகம் வாழ்த்து!

Date:

நேபாளம் காத்மண்டுவில் இடம்பெற்ற கலவரத்தின் போது தனது உயிரை பொருட்படுத்தாது. இந்தியா உட்பட பல நாடுகளை சேர்ந்த மக்களை காப்பாற்றியதற்கு மலேசிய பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் குலசேகரன், இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமானுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

தங்களுடைய செயல் மனிதத்தின் சிறந்த பண்புகளான கருணை, தியாகம் மற்றும் வீரத்தை வெளிப்படுத்துவதாக பிரதமரின் துணை அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

சோதனைகள் நிறைந்த காலங்களில் தைரியமும் உறுதியும் உடையவர்கள் பிறருக்கு எடுத்துக்காட்டாக இருப்பதோடு, இந்த அவசர காலத்தில் தாங்கள் செய்த செயல்கள் பலரையும் தொடர்ந்து ஊக்குவித்துக்கொண்டே இருக்கும் என தெரிவித்தார்.

மேலும் எதிர்காலத்திலும் தாங்கள் இந்த உயர்ந்த பண்புகளைத் தாங்கியவாறு, தங்களுடைய முன்னுதாரணம் மூலம் பிறரை ஊக்குவித்து, பிறருக்கு வழிகாட்டி உலகை உருவாக்க வேண்டும் என தனது வாழ்த்து கடிதத்தில் மலேசிய பிரதமர் அலுவலகத்தின் துணை அமைச்சர் குலசேகரன் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

வரவு செலவுத் திட்டம் முழுக்க முழுக்க பொய்

சமர்ப்பிக்கப்பட்ட வரவுசெலவுத் திட்டம் சமூக யதார்த்தத்தை புரிந்து கொண்டு முன்வைக்கப்பட்டதொரு வரவுசெலவுத்...

கொட்டாஞ்சேனையில் ஒருவர் சுட்டுக் கொலை!

கொழும்பு, கொட்டாஞ்சேனை 16வது லேன் பகுதியில் நேற்று (07) இரவு துப்பாக்கிச்...

வரவு செலவுத் திட்டத்தில் மலையகத்திற்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கது!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் 2026 ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்டத்தில்...

ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக பிரதீப் நிலங்க தெலே மீண்டும் தெரிவு

கண்டியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் தியவதன நிலமேவாக...