யசந்த கோதாகொட நியமனத்துக்கு அரசியல் அமைப்பு சபை அனுமதி

0
213

இலங்கையின் உயர்நீதிமன்ற நீதிபதி யசந்த கோதாகொட நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்படுவதற்கான அனுமதியை அரசியலமைப்பு சபை வழங்கியுள்ளது.

கடந்த 22 ஆம் திகதி நடைபெற்ற அரசியலமைப்பு சபைக் கூட்டத்தில், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அனுப்பியிருந்த பரிந்துரையை பரிசீலித்ததன் பின்னர் இந்த அனுமதி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அரசியலமைப்பின் படி, நீதித்துறை சேவை ஆணைக்குழுவிற்கு உயர்நீதிமன்றத்தில் தலைமை நீதிபதிக்கு அடுத்ததாக மூத்த நிலை வகிக்கும் நீதிபதியே நியமிக்கப்பட வேண்டும்.

அதன்படி, ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க நீதிபதி யசந்த கோதாகொட பெயரை அரசியலமைப்பு சபைக்கு பரிந்துரைத்திருந்தார்.

முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி எஸ். துரைராஜா ஓய்வு பெற்றதன் காரணமாக ஏற்பட்ட வெற்றிடத்திற்காகவே யசந்த கோதாகொட நீதித்துறை சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here