அரச வங்கிகளை விற்பனை செய்ய முடிவா?  

Date:

அரச தொழில் முயற்சி மறுசீரமைப்புப் பிரிவினரும் மத்திய வங்கி ஆளுநரும் முன்வைக்கும் முரண்பாடான அறிக்கைகள் தொடர்பில் அரசாங்கம் தெளிவான அறிக்கையை வெளியிட வேண்டும் என இலங்கை வங்கி ஊழியர் சங்கம் வலியுறுத்துகிறது.

விசேட நிறுவனத்திற்கு மாற்றப்படவுள்ள 31 அரச நிறுவனங்களில் அரச வங்கிகள் உள்ளதா இல்லையா என்பது தெளிவுபடுத்தப்பட வேண்டுமென அதன் பொதுச் செயலாளர் ரஞ்சன் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

ஆனால், கடந்த 4ம் திகதி அரச தொழில் நிறுவன சீர்திருத்த பிரிவு நடத்திய பயிலரங்கில், 31 அரசு நிறுவனங்களில் 6 வங்கிகள் சிறப்பு நிறுவனத்திற்கு மாற்றப்பட உள்ளதாக கூறப்பட்டது.

ஆனால் மத்திய வங்கியின் ஆளுநர் அவ்வாறானவற்றை உறுதிப்படுத்தாத காரணத்தினால் இவ்விரு தரப்பினரும் முரண்பாடான கதைகளை கூறி வருவதாக சேனநாயக்க குறிப்பிடுகின்றார்.

தேசிய சேமிப்பு வங்கியை விற்க அதிகாரிகள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறுகிறார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...