“நிகழ்நிலைக் காப்பு” எனும் சட்டமூலம் தொடர்பாக 2023 ஒக்டோபர் 04 ஆம் மற்றும் 06 ஆம் திகதிகளில் சபாநாயகிரினால் அறிவிக்கப்பட்ட நான்கு மனுக்களுக்கு மேலதிகமாக, அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம், உயர் நீதிமன்றத்திற்குச் சமர்ப்பிக்கப்பட்ட மேலும் முப்பது மனுக்களின் பிரதிகள் தனக்குக் கிடைத்துள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (17) பாராளுமன்றத்திற்கு அறிவித்தார்.