Tuesday, April 30, 2024

Latest Posts

துப்பாக்கிச் சூட்டில் 21 வயது யுவதி பலி

வவுனியா- நெடுங்கேணி சிவா நகர் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதியொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

இனந்தெரியாத நபர்களால் நேற்று (18) துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வவுனியா சிவா நகர் பகுதியை சேர்ந்த துரைராஜசிங்கம் பிரமிளா என்ற 21 வயது யுவதியே சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

குறித்த யுவதி தனது வீட்டில் இருந்து வெளியில் வரும்போதே துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.

இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நெடுங்கேணி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.