அரசியல் களத்தில் தீர்க்கமான சக்தியாக மாறும் மொட்டுக் கட்சி

0
175

எதிர்வரும் பாராளுமன்றத்திலும் அடுத்த ஐந்து வருடங்களிலும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசியல் களத்தில் தீர்க்கமான சக்தியாக மாறும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தான் பிரதிநிதித்துவப்படுத்தும் முகாம் கிராமத்தை கட்டியெழுப்பிய அரசியல் முகாமாகவும், நாட்டை நேசிக்கும் முகாமாகவும் பணியாற்றிய அனுபவம் உள்ளதாக நாமல் ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்வியை சீர்திருத்த தீர்க்கமான சக்தியாகவும், விவசாயி, மீனவர் மற்றும் தொழிலாளியை பாதுகாக்கும் தீர்க்கமான சக்தியாகவும் திகழ்வதாகவும் எதிர்வரும் காலத்தில் நாட்டின் ஐக்கியத்தை பாதுகாக்கும் சக்தியாக கட்டியெழுப்பப்படும் எனவும் நாமல் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here