காசல்ரி நீர்த்தேகத்தில் 8 அடி நீளமான மலைப்பாம்பு மீட்பு

0
183

காசல்ரி நீர்த்தேகத்தில் மீன் பிடிப்பதற்காக விரிக்கப்பட்டிருந்த மீன் வலையில் 8 அடி நீளமான பெரிய மலைப்பாம்பு ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

காசல் நீர்த்தேக்கத்தில் மீனவர் ஒருவர் மீன்பிடிப்பதற்காக நிவ்வெளிகம பகுதியில் விரிக்கப்பட்டிருந்த வலையினை எடுக்கச் சென்ற போது மீன் வலையில் மலைப்பாம்பு ஒன்று சிக்கியிருப்பதனை கண்டு அதிர்ந்து போய் வன பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து குறித்த மலைப்பாம்பினை கறைக்கு இழுத்து வரும் போது அது உயிரிழந்துள்ளதாகவும் அதனை அவ்விடத்தில் புதைக்குமாறும் குறித்த மலைப்பாம்பினை புதைத்தாகவும் பிரதேச வாசிகள் தெரிவித்தனர்.

கடந்த சில தினங்களாக மத்திய மலை நாட்டில் சரிவு பகுதியில் பெய்து வரும் கடும் மழை காரணமாக இந்த மலைப்பாம்பு வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு நீர்த்தேகத்திற்கு வந்திருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here