மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்தத் திட்டம் -ஜனாதிபதி தெரிவிப்பு

Date:

மாகாண சபைத் தேர்தலை அடுத்த வருடம் நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி – கஹவத்த பகுதியில் நேற்று நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது உள்ளுராட்சி மன்ற தேர்தலையும் நடத்துவதற்கு தாம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி, உள்ளுராட்சி மன்றத்திலிருந்து அமைச்சரவை வரை முழு அரச கட்டமைப்பும் பலப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதனுடாகவே, நாட்டை கட்டியெழுப்ப முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் தன் மீது வைத்துள்ள நம்பிக்கை மேலும் அதிகரிக்கும் வகையில் எதிர்கால செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் எனவும் ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார்.

அத்துடன் அதிகாரத்தைப் பயன்படுத்துவதற்குப் பலமான நாடாளுமன்ற அதிகாரமும் அவசியமாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி கடந்த காலங்களில் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்கள் மிகுந்த ஆத்திரத்துடன் உள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.

குறித்த உறுப்பினர்களின் முறையற்ற செயற்பாடுகளே மக்கள் மத்தியில் அவ்வாறான கோபம் ஏற்படக்காரணமாக இருந்ததாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

எனவே ஊழலற்றவர்களைக் கொண்டு பலமிக்கதொரு நாடாளுமன்றத்தை உருவாக்குவதற்கு மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கொலைக்கு உதவிய சட்டத்தரணி கைது

பாதாள உலகத் தலைவர் கணேமுல்ல சஞ்சீவவின் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் ஒரு...

ரணில் மீதான வழக்கு மீண்டும் விசாரணைக்கு

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக லண்டன் தனிப்பட்ட பயணத்திற்காக பொது...

காணாமல் போனவர்களின் 35வது வருடாந்த நினைவு நாள்! (புகைப்படங்கள்)

கொழும்பு LNW: சீதுவவில் உள்ள ரத்தொலுவ காணாமல் போனவர்களின் நினைவு நாள்...

நுகேகொட கூட்டு எதிர்கட்சி பேரணியில் SJB இல்லை

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத ஆட்சிக்கு எதிராக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஐக்கிய...