ரணிலின் கேள்விக்கு அநுரவின் பதில் என்ன?

Date:

புதிய பிரேரணைகளினால் நாட்டின் வருமானம் 3000 பில்லியன் ரூபாவாக குறைவதால் வரவு செலவுத் திட்ட பற்றாக்குறை 1000 லிருந்து 2500 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் எனவும் இந்த இடைவெளியை எவ்வாறு நிரப்புவது என்பதை ஜனாதிபதி உடனடியாக நாட்டுக்கு தெரிவிக்க வேண்டும் எனவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் கீழ் காஸ் சிலிண்டரில் போட்டியிடும் வேட்பாளர்களின் வெற்றியை உறுதிப்படுத்தும் வகையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த முன்னாள் ஜனாதிபதி,

“இறுதியில் எங்களின் வருமானம் 3700 பில்லியன். இந்த ஆண்டு, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பதின்மூன்று சதவீதத்தை ஈட்டுவதை இலக்காகக் கொண்டிருந்தோம். புதிய திட்டங்களை எல்லாம் போட்டால் நமது செலவு 5600 பில்லியன் டொலர்கள்தான். மறுபுறம், நமது வருமானம் 3000 பில்லியன் ரூபாயாகக் குறைகிறது. அப்போது பட்ஜெட் இடைவெளி 1000 முதல் 2500 பில்லியன் ரூபாயாக அதிகரிக்கும். பிறகு அந்த பணத்தை எப்படி கண்டுபிடிப்பது” என கேள்வி எழுப்பினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

மீண்டும் காலநிலை மாற்றம்

அடுத்த சில நாட்களில் வடகிழக்கு பருவமழை படிப்படியாக தீவில் நிலைபெறும் என்று...

சி.பி. ரத்நாயக்க விளக்கமறியலில்

கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் சி.பி. ரத்நாயக்கவை எதிர்வரும் 16 ஆம்...

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...