யானை தாக்கி பெண் பலியானதால் பிரதேசவாசிகள் தாக்கி பொலிஸ் உத்தியோகத்தர் பலி!!

Date:

அநுராதபுரம் கெப்பத்திகொல்லேவ பகுதியில் பொலீஸ் அதிகாரி ஒருவரை கிராம மக்கள் பொல்லால் அடித்துக் கொன்றனர்.

நேற்று பிற்பகல், கபிதிகொல்லேவ, ரம்பகேபூவெவ பகுதியில் வைத்து தாக்கப்பட்ட பொலிஸ் சார்ஜன்ட் உயிரிழந்துள்ளார்.

வாரியபொல பிரதேசத்தில் வசிக்கும் 54 வயதுடைய இவரின் சடலம் மதவாச்சி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

நேற்று மதியம் காட்டு யானை தாக்கியதில் உள்ளூர் பெண் ஒருவர் உயிரிழந்ததுடன், பிரதேசவாசிகள் வீதியைக் மறித்து செய்த போராட்டத்தை கட்டுப்படுத்தச் சென்ற போது, ​​பொலிஸ் பரிசோதகர் மற்றும் மேலும் இரு உத்தியோகத்தர்கள் மீது பொல்லால் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரியை காப்பாற்ற வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதாக பொலீசார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் பிக்கு உட்பட நான்கு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...

சுனில் வட்டகல சொகுசு வீடு விவகாரம்! CID முறைப்பாடு

பொது பாதுகாப்பு துணை அமைச்சர், வழக்கறிஞர் சுனில் வட்டகல தான் சமீபத்தில்...