இத்தாலி அனுப்புவதாக கூறி லட்சக் கணக்கில் மோசடி, நடிகர் உள்ளிட்ட குழு கைது

0
58

போலி விசா தயாரித்து இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல்வேறு நபர்களை ஏமாற்றிய திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி நாடகத்தின் துணை நடிகரின் தலைமையிலான ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட குழு வளான ஊழல் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டது.

புறக்கோட்டை மற்றும் கிரிபத்கொட பிரதேசத்தில் வைத்து மூவர் அடங்கிய இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலைச் சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கும்பலை வழிநடத்திய நடிகர் பல டெலி டிராமா படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார் மற்றும் பல முக்கிய சேனல்களில் பணியாற்றியவர்.

இத்தாலியில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஒருவரிடம் இருந்து பிரதான சந்தேக நபர் கிட்டத்தட்ட 20 இலட்சம் ரூபாவை பெற்றுக் கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இந்த கும்பலால் பாதிக்கப்பட்ட சுமார் 20 பேர் இதுவரை அவிசாவளை உட்பட பல பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடு செய்துள்ளனர்.

பிரதான சந்தேகநபர் கசினோ விளையாட்டிற்கு அடிமையானவர் எனவும் அவர் சில தினங்களில் கசினோ விளையாட்டில் சுமார் ஒரு கோடி ரூபாவை பந்தயம் கட்டி வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஒழுங்கமைக்கப்பட்ட கும்பலினால் பிடிபட்ட பெருந்தொகையானவர்கள் அவிசாவளையில் இருந்து வருவதாக தெரிவிக்கப்படுவதால், அவர்கள் விசாரணைக்காக அவிசாவளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் நிலைய கட்டளைத் தளபதி பிரதம பொலிஸ் பரிசோதகர் இந்திக்க வீரசிங்க தலைமையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here