சமஷ்டிக்கு இடமளியோம் – அநுர அரசு திட்டவட்டம்

Date:

“சமஷ்டி அரசமைப்புக்கும் ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் எமது ஆட்சியில் ஒருபோதும் இடமளியோம்.”

– இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான விஜித ஹேரத் தெரிவித்தார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று புதன்கிழமை நடைபெற்றது.

இதில், பங்கேற்ற செய்தியாளர் ஒருவர், சமஷ்டி அரசமைப்பை ஏற்படுத்த வேண்டும்,ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்த வேண்டும் ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையில் அநுர அரசுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சி ஆதரவு வழங்கவுள்ளது என்றும், இது தொடர்பில் அநுர அரசுடன் இலங்கைத் தமிழரசுக் கட்சி பேச்சு நடத்தியுள்ளது என்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில கூறியுள்ளமை தொடர்பில் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் விஜித ஹேரத், “சமஷ்டி அரசமைப்பையோ அல்லது ஐ. நா. தீர்மானங்களை நடைமுறைப்படுத்தவோ எமது ஆட்சியில் இடமில்லை. அத்துடன், ஆட்சியமைப்பது தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் பேச்சு எதனையும் நடத்தவும் இல்லை.” – என்றும் கூறினார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நோர்வூட் பிரதேச சபையில் இ.தொ.கா. விரைவில் ஆட்சியமைக்கும்!

‘‘நுவரெலியா மாவட்டம் உட்பட பல்வேறு மாவட்டங்களில் இ.தொ.காவும், தேசிய மக்கள் சக்தியும்...

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...