ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஹம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ, வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளின் இரண்டாம் வாசிப்பின் போது வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த எம்.பி.,
முன்வைக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் நல்ல மற்றும் கெட்ட அம்சங்களைக் கொண்டிருப்பதாகவும் சில முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் கடந்த முறை அதாவது 2023 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளே முன்வைக்கப்பட்டதாகவும் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கு எதிர்க்கட்சிகளே பொறுப்பு எனவும், ஆனால் அந்த வகையில் வரவு செலவுத் திட்டத்தை தோற்கடிக்க வேண்டும் என்ற விருப்பம் அவர்களுக்கு இல்லை எனவும் நாமல் ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தில் அங்கம் வகிப்பவர் என்ற வகையில் வரவு செலவுத் திட்டத்தில் உள்ள தவறுகளையும் பலவீனங்களையும் சுட்டிக்காட்டி மக்களுக்கு நன்மைகளை வழங்குவது தனது கடமை எனவும் அவர் குறிப்பிடுகின்றார்.
வரவு செலவுத் திட்டத்தில் கிராமிய பொருளாதாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான நடைமுறை வேலைத்திட்டம் எதுவும் இல்லை எனத் தெரிவித்த ராஜபக்ஷ, இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை தரை மட்டத்தில் நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் இருப்பதாக மேலும் குறிப்பிடுகிறார்.
மேற்கூறிய உண்மைகள் காரணமாக வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பில் வாக்களிப்பதைத் தவிர்ப்பதாக அவர் வலியுறுத்துகிறார்.