திக்வெல்ல துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி!

0
37

மாத்தறை, திக்வெல்ல, வலஸ்கல பிரதேசத்தில் இன்று (நவம்பர் 21) அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வலஸ்கல பிரதேசத்தை சேர்ந்த 43 வயதான ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இன்று அதிகாலை 05.30 மணியளவில் வலஸ்கல கால்நடை வைத்திய அலுவலகத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த போது துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

துப்பாக்கிச்சூடு நடத்தியது யார் என்பது இதுவரை வெளியாகவில்லை என்பதுடன், திக்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here