அடுத்த தேர்தல் தயார்

0
48

எதிர்வரும் 2025 ஆம் ஆண்டு தொடக்கத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். கண்டியில் இன்று (23) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில்.

“உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. இந்த ஆண்டு நடத்த ஏற்பாடுகள் செய்யப்படவில்லை. ஆனால் அடுத்த வருட ஆரம்பத்தில் உள்ளூராட்சி தேர்தல்… அதாவது உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம்”. அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here