இஸ்ரேலில் இலங்கையர்களுக்கு ஆயுதம் பயிற்சி! பரபரப்பு தகவலை வெளியிட்டார் ஹக்கீம்!!  

Date:

இலங்கையில் இருந்து இஸ்ரேலுக்கு தொழில் வாய்ப்புக்களுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கையர்களுக்கு இராணுவ பயிற்சி அளிக்கும் திட்டம் இருப்பதாக ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பரபரப்பு தகவல் வெளியிட்டுள்ளார்.

பாராளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறினார்.

காசா பகுதிகளில் இருந்து கைப்பற்றப்பட்ட இடங்களுக்கு இந்த இலங்கையர்கள் வேலைக்கு அமர்த்தப்படுவதாக ஹக்கீம் குற்றம் சாட்டினார்.

இவ்வாறு இஸ்ரேல் சென்று ஆயுத பயிற்சி பெறுவோர் மூலம் நாட்டில் எதிர்காலத்தில் ஏற்படும் பிரச்சினைகள் குறித்து கவனம் செல்லுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

இதற்கு பதில் அளித்த வெளிநாட்டு  வேலைவாய்ப்பு அமைச்சர் இலங்கை பணியாளர்களுக்கு ஆயுத பயிற்சி வழங்கும் திட்டம் எதுவும் இல்லை எனவும் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ள இந்த இனவாத கருத்தை கண்டிப்பதாகவும் தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

இந்த வரவு செலவு திட்டம் வேண்டாம்

பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தற்போதுள்ள வரவு செலவுத் திட்டங்களைத் திருத்தி,...

சாரதி அனுமதிப்பத்திரக் கணினி முறைமை மீண்டும் சேவையில்

சீரற்ற வானிலை காரணமாக தடைப்பட்டிருந்த மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் சாரதி அனுமதிப்பத்திரக்...

விமலுக்கு பிடியாணை

நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச...

இதுவரை 465 பேர் பலி

நாட்டின் 25 மாவட்டங்களையும் பாதித்த அனர்த்த நிலைமை காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை...