இன்று உயர்தர பரீட்சை

Date:

2024 உயர்தரப் பரீட்சை இன்று (25ஆம் திகதி) முதல் அடுத்த மாதம் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு பரீட்சைக்கு 333,183 (333,183) மாணவர்கள் தோற்றவுள்ளதாக அவர் தெரிவித்தார்.

253,390 (253,390) பாடசாலை விண்ணப்பதாரர்களும் 79,795 (79,795) தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளனர் என்று அவர் கூறினார்.

உயர்தரப் பரீட்சை நிலையங்களில் கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கான அனுமதி பரீட்சை மண்டப அதிபர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், உதவி மண்டப முதல்வர்கள் அல்லது ஊழியர்கள் இம்முறை கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்துவதற்கு அனுமதியில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

மாணவர்கள் தண்ணீர் போத்தல்களை எடுத்துச் செல்லலாம் என்றும், அவை தெரியும் தண்ணீர் போத்தல்களாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

இதற்கிடையில், உயர்தரப் பரீட்சை ஆரம்பமாகவுள்ள இன்று முதல் பரீட்சை காலத்தில் மாணவர்கள் சீரற்ற காலநிலை காரணமாக அனர்த்தங்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டால், பேரிடர் முகாமைத்துவ நிலையத்தின் அவசர இலக்கமான 1170 அல்லது அதன் விசேட ஒருங்கிணைந்த அவசர செயற்பாட்டு அறை இலக்கங்களுக்கு அறிவிக்குமாறு 0113668020, 0113668013, 0113668010, 0763117117 மாணவர்களிடம் அதிகாரிகள் கேட்டுக்கொள்கின்றனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்து சஜித் விளக்கம்

பிரதி அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருப்பதாகக்...

எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு ஆப்பு

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள்...

மலையக அதிகார சபையை மூடும் நடவடிக்கை குறித்து ஜனாதிபதி மீள்பரிசீலனை செய்ய வேண்டும்!

மலையக அதிகார சபை என்பது பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உருவாக்கப்பட்டது. அதை...

ராஜித பிணையில் விடுதலை

ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர்...