கண்டியில் 6000 பேருக்கு ஒரு மதுபான சாலை!

Date:

மது விற்பனை நிலையங்கள் திறக்கும் நேரம் திருத்தியமைக்கப்பட உள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான கலந்துரையாடல்கள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், மதுபானம் தொடர்பில் நாட்டில் உள்ள சில சட்டங்களும் சட்டவிரோத மதுபானத்திற்கு மக்களைத் தூண்டுவதாக இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை கலால் உத்தியோகத்தர் சங்கத்தின் 23 ஆவது வருடாந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார்.

சட்டவிரோத மதுபானத்தின் வளர்ச்சி குறித்து கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர், 20 வருடங்களில் சட்டப்பூர்வ மதுபானம் 50% வளர்ச்சியடைந்துள்ள நிலையில், சட்டவிரோத மதுபானத்தின் வளர்ச்சி 500% அதிகமாகும். இந்த நிலைமையை அடக்குவதற்கு மதுபான சாலை விரிவாக்கமும் ஒரு காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கண்டி மாவட்டத்தில் 6,000 பேருக்கு ஒரு மதுபானக் கடை உள்ள நிலையில், முல்லைத்தீவு மாவட்டத்தில் 9,90,000 பேருக்கு ஒரு மதுபானக் கடை இருப்பதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மதுக்கடைகளை இரவு 9:00 மணி முதல் சிறிது நேரம் திறக்க ஏற்பாடு செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கம்பஹா ஒஸ்மண்ட் கைது

கணேமுல்ல சஞ்சீவ என்பவரைக் கொலை செய்வதற்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் 'கம்பஹா...

குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நீடிக்கிறது

இலங்கைக்கு வடகிழக்கே நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்னும்...

கொழும்பில் பலமிழக்கும் எதிர்கட்சி!

கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களில் மூவர் இனிமேல் சுயாதீனமாக செயல்படுவதாக அறிவித்துள்ளனர். இவ்வாறு...

பலத்த மழை குறித்த எச்சரிக்கை

கடந்த 22 மணித்தியாலங்களில் நாட்டின் அதிகூடிய மழைவீழ்ச்சியாக 204 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி...