ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கட்சிக்குள் தாம் வகித்து வரும் பதவிகளில் இருந்து நீக்கியதற்கு எதிராக நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்குமாறு கோரி அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
குறித்த மனு இன்று (டிசம்பர் 05) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே கொழும்பு மாவட்ட நீதிமன்ற நீதிபதி பூர்ணிமா பரணகம இந்தத் தீர்மானத்தை அறிவித்தார்.
N.S