கம்பஹா, மல்வத்துஹிரிபிட்டியவில் இருந்து வெகு தொலைவில் உள்ள கல்லூரி ஒன்றின் சிற்றுண்டிச்சாலையில் கண்டெடுக்கப்பட்ட போதைப்பொருள் மற்றும் மாத்திரைகள் பல பொதிகளுடன் சிற்றுண்டிச்சாலையை நடத்தி வந்த 42 வயதுடைய பெண் கைது செய்யப்பட்டதாக மல்வத்துஹிரிபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் குறித்த உணவகத்தை சோதனையிட்ட போது, போதைப்பொருளின் 38 கேப்சூல்கள் மற்றும் 5 ஐஸ் வகை போதை பாக்கெட்டுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட பெண் மல்வத்துஹிரிபிட்டிய பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.