Saturday, July 27, 2024

Latest Posts

21 தமிழக மீனவர்கள் கைது

ந.லோகதயாளன்

இலங்கை கடற் பரப்பிற்குள் எல்லை தாண்டிய மீனபிடியில் ஈடுபட்ட 21 இந்திய மீனவர்கள் 4 படகுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகம் இராமேஸ்வரம் மற்றும் கோட்டைபட்டினம் பகுதிகளில் இருந்து நேற்று காலை புறப்பட்ட படகுகளே நேற்று மாலை இலங்கையின் மன்னார் மற்றும் யாழ்ப்பாணம்  கடற்பரப்பிற்குள் எல்லை தாண்டி உடபுகுந்து மீன்பிடியில் ஈடுபட்ட சமயம் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 8 தமிழக மீனவர்களும் ஒரு படகும் மன்னார் கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் கடற்பரப்பில் கைதான 13 மீனவர்களும் மூன்று படகுகளுடன் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு  அழைத்து வரப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் மாவட்ட நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளனர்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.