Sunday, September 8, 2024

Latest Posts

தமிழ்நாட்டை சேர்ந்த 25 மீனவர்கள் கைது

எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக தமிழ்நாட்டு மீனவர்கள் 25 பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

நாகை மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 2 படகுகளில் மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் 25 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

பருத்தித்துறை கடற்பரப்பில் வைத்து தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இலங்கை கடற்படையினர் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி அவர்களை கைது செய்து இருக்கிறார்கள். பல்வேறு படகுகளில் மீனவர்கள் மீன் பிடிக்க சென்றுள்ளனர். அப்போது ஒரு படகு எல்லை தாண்டியதாக கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இந்த மீனவர்களை இலங்கை கடற்படை அதிகாரிகள், காங்கேசன் துறை கடற்படை முகாமிற்கு அழைத்து சென்றுள்ளனர். காலை 9 மணிக்கு தமிழக மீனவர்கள் அந்த முகாமில் அடைத்து வைக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இவர்கள் அங்கே மீன் பிடித்துக்கொண்டு இருக்கும் போது, வந்த கடற்படை அதிகாரிகள், எல்லை மீறி நீங்கள் மீன் பிடிக்கிறீர்கள் என்று கூறி இவர்களை தாக்கியதாக கூறப்படுகிறது. அதோடு இவர்களின் வலைகளை அங்கேயே அறுத்ததாகவும் கூறப்படுகிறது.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.