சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல இராஜினாமா செய்ததையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கு களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி நிஹால் அபேசிங்கவை புதிய சபாநாயகராக நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நிஹால் அபேசிங்க தேசிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகமாகவும் பணியாற்றுகிறார்.
நிஹால் அபேசிங்க தேசிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட விசேட வைத்தியர் என்பதனால் கல்வி அல்லது தொழில் தகைமை தொடர்பில் எதிர்காலத்தில் எவ்வித பிரச்சினையும் ஏற்பட வாய்ப்பில்லை எனவே அவரை சபாநாயகர் பதவிக்கு நியமிக்க முன்மொழியப்பட்டுள்ளதாகவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.