எதிர்வரும் ஏப்ரல் மாதம் சிங்கள தமிழ் புத்தாண்டுக்கு முன்னதாக உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இத்தேர்தலை விரைவில் நடத்துவது குறித்து தேர்தல்கள் ஆணைக்குழு கவனம் செலுத்தியுள்ள நிலையில், இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை நடத்த முடியாது எனவும், பரீட்சை முடிந்த பின்னர் தேர்தலை நடத்துவதற்கான திகதிகளை அறிவிக்க தயார் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்ட அறிக்கையை எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் சில தினங்களில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அதற்கமைவாக, அந்த பணிகள் நிறைவடைந்ததன் பின்னர் உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.