அர்ஜுன மகேந்திரனை கைது செய்யுமாறு திறந்த பிடியாணை

Date:

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் மற்றும் பேர்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அஜன் கார்டிய புஞ்சிஹேவா ஆகியோரை உடனடியாக கைது செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் திறந்த பிடியாணை பிறப்பித்துள்ளது.

2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 27ஆம் திகதி இடம்பெற்ற மகாவங்கி பிணை முறி ஏலத்தில் அரசாங்கத்திற்கு 600 மில்லியன் ரூபா நஷ்டம் ஏற்படுத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கு நேற்று (டிசம்பர் 19) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

மேற்படி சந்தேகநபர்கள் இருவரும் நீதிமன்றில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருந்தும் நீதிமன்றில் ஆஜராகாத காரணத்தினால் இந்த பிடியாணைகளை பிறப்பிக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், இந்த வழக்கின் மற்றுமொரு சந்தேகநபரான அர்ஜூன் அலோசியஸ், மற்றுமொரு வழக்கு தொடர்பில் தற்போது சிறையில் உள்ள அர்ஜூன் அலோசியஸை அடுத்த நீதிமன்ற அமர்வில் முன்னிலைப்படுத்துமாறும் நீதவான் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எம்பி இராமநாதன் அர்ச்சுனா குறித்து நீதிமன்றம் விடுத்த அறிவிப்பு

யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சை  பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா,  பாராளுமன்ற உறுப்பினராக...

எலான் மஸ்க்கிற்கு நன்றி தெரிவித்த ரணில்

இலங்கையில் தற்போது ஸ்டார்லிங் இணைய சேவை செயற்பாட்டை ஆரம்பித்துள்ளதாக எலான் மஸ்க்...

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை

சிறுபோகத்திற்கான நெல் கொள்வனவு நாளை(03) ஆரம்பிக்கப்படவுள்ளது. நாட்டரிசி நெல் 1கிலோகிராம்  120 ரூபாவிற்கும்...

IMF தரும் மகிழ்ச்சி செய்தி

இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதி (EFF) குறித்த நான்காவது மதிப்பாய்வை சர்வதேச...