வரவு செலவுத் திட்டம் ஒத்தி வைத்தால் அடுத்த ஆண்டில் எந்த செலவும் அனுமதிக்கப்பட மாட்டாது. ஆணையாளர்

Date:

மன்னார் பிரதேச சபையில் நேற்று முன்தினம்  இடம்பெற்ற குழப்பங்கள் தொடர்பில் உள்ளூராட்சி ஆணையாளர் நேற்றைய தினம் நேரில் சென்று ஆராய்ந்தார்.

மன்னார் பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் மீதான வாக்கெடுப்பு தினத்தில் கட்சி உறுப்பினர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டை காரணம் காட்டி வரவு செலவுத் திட்டம் வாக்கெடுப்பு இன்றி ஒத்தி வைக்கப்பட்டது. இது தொடர்பிலும், முரண்பாடுகள் தொடர்பிலும் ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதனால் உடனடியாக நேரில் சென்ற ஆணையாளர் இவை தொடர்பில் ஆராய்ந்துள்ளார்.

இவற்றின் அடிப்படையில் உறுப்பினர்களிடையே ஏற்பட்ட முரண்பாட்டின் அடிப்படையில் வரவு செலவுத் திட்டம் ஒத்தி வைக்க முடியாது எனவும் வரவு செலவுத் திட்ட திறைவேற்றத்திற்கான கால வரையறைகளும் அதில் அடங்குவதனால் உடன் வரவு செலவுத் திட்டம் சபைக்கு சமர்ப்பித்து அதனை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.

அவ்வாறு நிறைவேற்றத் தவறினால் 2022ஆம் ஆண்டின் ஆரம்பம் முதலே சபையின் எந்தச் செலவும் சட்ட அனுமதியற்ற செலவாகவே கணிக்கப்படும் என்பதனால் எந்தவொரு செலவும. மேற்கொள்ள முடியாத நிலைமையே ஏற்படும் என்பதனை அறிவுறுத்தியதாக தெரியவலுகின்றது. 

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

MV X-Press Pearl விபத்துக்கு இழப்பீடு வழங்க சிங்கப்பூர் ஏன் மறுக்கிறது?

மே–ஜூன் 2021 இல் ஏற்பட்ட MV X-Press Pearl விபத்து, இலங்கை...

மீண்டும் இலங்கையை கட்டி எழுப்புவோம்

கடந்த நாட்களில், நமது நாடு கடினமான மற்றும் இதயத்தை உடைக்கும் சவாலை...

15ஆம் திகதிக்கு முன்னர் அம்பிட்டிய சுமண ரத்ன தேரர் கைது

அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை கைது செய்து எதிர்வரும் 15 திகதிக்கு...

பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவும் Dreamro!

நாடு முழுவதும் ஏற்பட்ட சமீபத்திய பேரழிவுகளால் சேதமடைந்த அழகு நிலையங்களுக்கு உதவுவதற்காக...