Wednesday, April 24, 2024

Latest Posts

குடும்பத்துடன் கலாசார உடையில் ஏழுமலையானை தரிசித்த பிரதமர்

இரண்டு நாள் சுற்றுப்பயணமாக நேற்று மதியம் திருப்பதிக்கு சென்ற இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ச இன்று காலை விஐபி பிரேக் தரிசனம் மூலம் திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார்.

இலங்கை பிரதமர்  2 நாள் சுற்றுப்பயணமாக மனைவியுடன் நேற்று மதியம் திருப்பதிக்கு வந்தார். திருப்பதி மலையில் இரவு தங்கிய அவர்கள் இன்று காலை ஏழுமலையான் கோவிலுக்கு சென்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் சாமி தரிசனம் செய்தனர்.

சாமி கும்பிட்ட பின் அவர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் பிரசாதங்கள், நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. தேவஸ்தான வேத பண்டிதர்கள் அவருக்கு ஆசி வழங்கினர்.

இன்று மாலை வரை திருப்பதி மலையில் தங்கியிருக்கும் அவர் 5 மணிக்கு திருப்பதி மலையில் இருந்து புறப்பட்டு ரேணிகுண்டா விமான நிலையத்தை அடைந்து அங்கிருந்து கொழும்பு புறப்பட்டுச் செல்கிறார்.

Latest Posts

spot_img

Don't Miss

Stay in touch

To be updated with all the latest news, offers and special announcements.