பொலாசார் மீது சக பொலிசார் சூடு மூவர் உயிரிழப்பு.

0
238

அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் நிலையத்திற்குள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரினால் நடத்தப்பட்ட. துப்பாக்கி பிரயோகத்தில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்தச் சம்பவத்தில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட மேலும்  இருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவிக்கின்றது.

சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர் ரி 56 ரக துப்பாக்கிகள் இரண்டு மற்றும் ரவைகள் 19 உடன் மொனராகலை மாவட்ட  எத்திமலே பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளார்.

துப்பாகி பிரயோகம் மேற்கொண்ட பொலிஸ் சாஜனை கைது செய்துள்ளதாக திருக்கோவில் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிவரும் பொலிஸ் சாஜன் ஒருவர் வீடு செல்வதற்கு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியிடம் லீவு கோரியுள்ளார். இருந்தபோதும்  லீவு வழங்க மறுத்தமையால்  ஆத்திரமடைந்த பொலிஸ் சாஜன்  நேற்று வெள்ளிக்கிழமை இரவு 11.30 மணியளவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி வாகனத்தில் ஏறி ரோந்து நடவடிக்கைக்கு செல்வதற்கு தயாராகி இருந்தபோது அவர் மீது ’ துப்பாகிபிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து அவரை தடுக்க முற்பட்ட பொலிசார் மீதும்  அவர் துப்பாக்கி பிரயோகம் செய்ததையடுத்தே  சம்பவ இடத்தில் 3 பொலிசார் உயிரிழந்தனர் .

இதனால்  அந்தபகுதியில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.  சம்பவ இடத்திற்கு பொலிஸ் அத்தியட்சகர் உட்பட பொலிஸ் உயர் அதிகாரிகள் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here