குற்றவாளிகளுடன் தொடர்புடைய சில மதத்தலைவர்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளை விமர்சிக்கின்றனர்

Date:

குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குழுக்களுடன் தொடர்புகளை பேணிவரும் சில மதத்தலைவர்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் பாசாங்கு செய்வதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொலிஸாரின் மனா உறுதியைக் குலைக்கும் வகையில் சில அரசியல்வாதிகளும் செயற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிப்பட்ட பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் உட்பட பல்வேறு சவால்களை இந்த செயற்பாட்டின் மூலம் எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் அனைத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான தைரியத்தை ஜனாதிபதி தமக்கு தருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

ஜிந்துப்பிட்டியில் மீண்டும் ஒருவர் சுட்டுக் கொலை

கொழும்பு - ஜிந்துப்பிட்டிய பகுதியில் இன்று (14) இரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச்...

ஏன் இந்த இராஜினாமா?

கொழும்பு துறைமுகத்தில் இருந்து 323 கொள்கலன்கள் கட்டாய பௌதீக ஆய்வுக்கு உட்படுத்தப்படாமல்...

ரணில் தொடர்பான B அறிக்கையின் சட்ட ஓட்டை அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன்...

அவசரமாக கூடும் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

அக்குரேகொட துப்பாக்கிச் சூடு சம்பவத்தை முன்னிட்டு, இலங்கை சட்டத்தரணிகள் சங்க Bar...