குற்றவாளிகளுடன் தொடர்புடைய சில மதத்தலைவர்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளை விமர்சிக்கின்றனர்

Date:

குற்றச் செயல்களில் ஈடுபட்டுவரும் குழுக்களுடன் தொடர்புகளை பேணிவரும் சில மதத்தலைவர்கள் பொலிஸாரின் நடவடிக்கைகளை விமர்சிக்கும் வகையில் பாசாங்கு செய்வதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

ஹோமாகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலே அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

அத்துடன், பொலிஸாரின் மனா உறுதியைக் குலைக்கும் வகையில் சில அரசியல்வாதிகளும் செயற்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிப்பட்ட பாதுகாப்பிற்கான அச்சுறுத்தல்கள் உட்பட பல்வேறு சவால்களை இந்த செயற்பாட்டின் மூலம் எதிர்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இருப்பினும் அனைத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் குற்றவாளிகளை கைது செய்யும் நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தாம் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு தேவையான தைரியத்தை ஜனாதிபதி தமக்கு தருவதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சாதாரண தர பரீட்சை பெறுபேறு வெளியானது

2025 க.பொ.த. சாதாரண தர பரீட்சையின் பெறுபேறுகள் வெளியாகியுள்ளன. பரீட்சை திணைக்களத்தின் www.doenets.lk...

ICC தலைவருடன் ஜனாதிபதி சந்திப்பு

சிறிலங்கா கிரிக்கெட் இடைக்கால குழு தொடர்பாக எழுந்துள்ள சிக்கல் குறித்து கலந்துரையாடுவதற்காக,...

இறக்குமதி ஒழுங்குகள் குறித்து ஜனாதிபதி விடுத்துள்ள வர்த்தமானி அறிவித்தல்

இலங்கையிலிருந்து மேற்கொள்ளப்படும் இறக்குமதிகள் தொடர்பான வெளிநாட்டு நாணயக் கொடுப்பனவுகளை மிகவும் திறம்படக்...

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அமெரிக்க விசாரணை அறிக்கைகளை அரசு பெற்றுள்ளதா?

2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக, அப்போது...