மன்மோகன் சிங் மறைவு – முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

Date:

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92), உடல்நலக் குறைவு மற்றும் வயது மூப்பு பாதிப்பால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

அவரது மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்தியில், அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் 27/12/24 அன்று ரத்து செய்யப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் 7 நாட்களுக்கு துக்கம் அனுஷ்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், இன்று காலை 11.00 மணியளவில் இந்தியாவின் மத்திய அமைச்சரவை கூடுகிறது.

கலாநிதி மன்மோகன் சிங்கின் இறுதிச்சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடத்தப்படும் என இந்திய செய்திகள் தெரிவிக்கப்படுகிறது.

இதேபோல், கர்நாடகாவில் 7 நாட்கள் துக்கம் அனுஷ்டிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இன்று (27) ஒரு நாள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது என கர்நாடக முதலமைச்சர் அலுவலக செய்தி தெரிவிக்கின்றது.

இதேவேளை மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்கு நாளை நடைபெறவுள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு கட்சி சார்பில் அறிவிக்கப்படும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

கெஹெலிய ரம்புக்வெல்ல பிணையில் விடுதலை

கடந்த அரசாங்கத்தின் போது தரமற்ற மனித இம்யூனோகுளோபுலின் தடுப்பூசிகளை வாங்கியதன் மூலம்...

காட்டுத் தீயை கட்டுப்படுத்த இராணுவம் களத்தில்

பலாங்கொடை நன்பேரியல் வனப்பகுதியில் ஏற்பட்ட தீயை கட்டுப்படுத்த இராணுவமும் வரவழைக்கப்பட்டுள்ளது.  தொடர்ந்தும் சில...

2000 நாணயத்தாள் தொடர்பில் இலங்கை மத்திய வங்கி விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கியின் 75ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு கடந்த மாதம்...

தியாகி திலீபன் நினைவு ஊர்திப் பயணம் ஆரம்பம்

தியாகி திலீபனின் நினைவேந்தலை அனுஷ்டிக்கும் முகமாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால்...