ருமேனியாவிலிருந்து சட்டவிரோதமாக ஹங்கேரி செல்ல முற்பட்ட இலங்கையர்கள் கைது!

Date:

இலங்கை, பங்களாதேஷ் , எரித்திரியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த சுமார் 27 புலம்பெயர்ந்தோர், துணிகள் மற்றும் உலோகக் கம்பிகள் ஏற்றப்பட்ட இரண்டு டிரக்குகளுக்குள் மறைந்திருந்து, ருமேனியாவில் இருந்து ஹங்கேரிக்கு சட்டவிரோதமாக எல்லையைக் கடக்க முயன்றபோது, ருமேனிய பொலிசாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

Nadlac I Border Crossing Point (PTF) இல் நாட்டை விட்டு வெளியேறவிருந்த ஒரு டிரக் சோதனையின் போது, அது ஒரு ருமேனியரால் இயக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் கடத்தப்பட்ட பொருட்களில் புலம்பெயர்ந்தோர் மறைந்திருந்தனர். இதில் 17 வெளிநாட்டினர் கண்டுபிடிக்கப்பட்டனர்.

குறித்த நபர்கள் பின்னர் அழைத்துச் செல்லப்பட்டு மேலதிக விசாரணைக்காக ருமேனிய அராத் காவல்துறையின் தலைமையகத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அங்கு எல்லைப் பொலிசார் அவர்கள் 21 முதல் 67 வயதுடைய இலங்கை , பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் எரித்திரியாவின் குடிமக்கள் என்பதைக் கண்டறிந்தனர்.

இந்த சட்டவிரோத நடவடிக்கை குறித்து மேலதிக தகவல்களை கண்டறிய விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக ருமேனிய எல்லைப் பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.

ஆதாரம்: SchengenVisaInfo.com

N.S

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

சங்கீத்சன் பிணையில் விடுதலை

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சொல்லிசை பாடகர்...

4 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் 4 மாவட்டங்களுக்கு முதற்கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்று (12) முற்பகல்...

அரசாங்கம் நீதிமன்ற நியமனங்களை தாமதப்படுத்துவதாக குற்றச்சாட்டு

உச்ச நீதிமன்றத்தில் தற்போது 4 நீதிபதி பதவிகள் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில்...

நாம் ராஜபக்சகளை போன்று சுனாமி திருடர்கள் அல்ல – பிமல் ரத்நாயக்க

எந்த அரசாங்கத்திலும் சில விடயங்கள் நடைமுறையில் இருந்து கொண்டிருந்தாலும், அவை அனைத்தும்...