கட்சித் தலைவர்கள் மற்றும் போராட்டத் தலைவர்கள் இடையேயான கலந்துரையாடல் இடைநிறுத்தப்பட்டுள்ளது

Date:

கட்சி சார்பற்ற போராட்டத்தின் தலைவர்கள் குழுவொன்று இன்று பாராளுமன்றத்தில் கட்சித் தலைவர்களுடன் விசேட கலந்துரையாடலொன்றை மேற்கொள்ளவிருந்தது. இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு இடம்பெறவிருந்த நிலையில், கலந்துரையாடல் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய நாடாளுமன்ற விவகாரக் குழுவில் கட்சித் தலைவர்கள் போராட்டத் தலைவர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டனர்.

விவாதம் ஒத்திவைக்கப்படுவதற்கு என்ன காரணம் என்று தெரியவில்லை.

இதேவேளை, நாடாளுமன்ற விவகாரங்களுக்கான குழுவின் கூட்டம் இன்று நடைபெறவிருந்த நிலையில், அதுவும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இன்று சபாநாயகர் மகிந்த யாப்பா அபேவர்தனவுடன் போராட்டத்தின் தலைவர்கள் கலந்துரையாடல் ஒன்றை நடத்தியதுடன் 25 போராட்ட தலைவர்கள் கலந்துகொண்டனர்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

பாணந்துறையில் ஒருவர் சுட்டுக் கொலை

பாணந்துறை, அலுபோகஹவத்த பகுதியில் நேற்று இரவு (ஆகஸ்ட் 27) நடந்த துப்பாக்கிச்...

கெஹல்பத்தர பத்மே கைது!

நீண்ட காலமாக செய்திகளில் இடம்பெற்று வரும் பிரபல பாதாள உலகத் தலைவரான...

வைத்தியர் ருக்‌ஷான் பெல்லனாவுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உடல்நிலை குறித்து ஊடகங்களுக்கு அறிக்கைகளை வெளியிட்ட...

சட்டம் சகலருக்கும் சமம்!

குற்றவாளிகளைக் கைது செய்வது மற்றும் தண்டனை வழங்குவது உள்ளிட்ட விடயங்களில் சட்டம்...