சர்வதேச நாணய நிதியத்தின் புதிய அறிவிப்பு

Date:

எதிர்வரும் டிசம்பர் மாதம் சர்வதேச நாணய நிதியத்தின் முதல் நிதி உதவியை இலங்கை அரசாங்கம் பெறும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அத்துடன், டிசம்பரில் பெறப்படும் முதல் நிதி உதவி சுமார் 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள 3 பில்லியன் டொலர் நிதி உதவியை இலங்கை சர்வதேச நாணய நிதியத்திடம் கோரியிருந்தது.

நீண்ட இழுத்தடிப்புகளுக்கு மத்தியில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சர்வதேச நாணய நிதியத்துடன் இலங்கை அரசாங்கம் ஊழியர் மட்ட உடன்படிக்கை செய்து கொண்டது.

இதன்படி, நெருக்கடியில் இருந்து மீள இலங்கைக்கு 2.9 பில்லியன் அமெரிக்க டொலர் வழங்க சர்வதேச நாணய நிதியம் இணக்கம் வெளியிட்டது.

இது நான்கு வருட வேலைத்திட்டத்திற்கு உட்பட்டு இலங்கைக்கு நீட்டிக்கப்பட்ட கடன் வசதியாக வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...

கொள்கலன் விடுவிப்பு தொடர்பில் அதிர்ச்சி தகவல்!

சுங்க பரிசோதனையின்றி கொள்கலன் ஏற்றுமதிகளை விடுவிப்பது தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்க ஜனாதிபதியால்...

2 மாதங்களில் 23 பில்லியன் பெறுமதி போதைப் பொருட்கள் கைப்பற்றல்

நீண்ட நாள் மீன்பிடி படகுகள் ஊடாக நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட 23 பில்லியன்...

இன்றைய வானிலை அறிவிப்பு

இன்றையதினம் (30) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா,...