அரிசி திருடும், பாண் பறிக்கும் நிலையில் நாட்டு மக்கள்!

Date:

நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் கடும் அழுத்தங்களுக்கு உள்ளாகி வீடுகளில் உள்ள அரிசிப் பெட்டிகளை கூட கொள்ளையடித்து வருவதாக ஜே.வி.பி.யின் அரசியல் குழு உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி கூறுகிறார்.

“இன்று வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தை விட கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

இலங்கையில் 63 இலட்சம் மக்கள் இன்று பட்டினியால் வாடுவதாக உலக உணவு அமைப்பு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் ஒன்பது மாதக் குழந்தையொன்றை ஊட்டச் சத்து குறைபாடுள்ள தாயுடன் சந்தித்தேன். ஆனால் மானியம் வழங்கப்படவில்லை. அரசாங்கத்திடம் இருந்து குறைந்தபட்சம் 5000 ரூபாய் கிடைக்காது.

இன்று நெற்கதிர்கள் தூக்கி எறியப்பட்டுள்ளன. பாண் பறிக்கப்பட்டது. கடைகள் உடைக்கத் தொடங்கியுள்ளன. மக்கள் வாழ முடியாத போது, ​​குழந்தைகளுக்கு உணவு கொடுக்க முடியாத போது, ​​இந்த ஆட்சியாளர்கள் மக்களை கொள்ளையடிக்க வைத்துள்ளனர்.

ஜே.வி.பியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சுனில் ஹந்துன்நெத்தி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

திருகோணமலையில் ஒருவர் சுட்டுக் கொலை

திருகோணமலையில் நேற்று (01) மாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர்...

எரிபொருள் விலை திருத்தம் இல்லை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை...

ரம்புக்கனையில் மண்சரிவு

ரம்புக்கனை, கங்கைகும்பூர பகுதியில் இன்று (01) பாரிய மண்சரிவு ஒன்று பதிவாகியுள்ளதாக...

அனர்த்த மீட்பு உலங்குவானூர்தி விபத்து

அனர்த்த மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த இலங்கை விமானப்படைக்கு சொந்தமான பெல் 212...