இலங்கைக்கு கனடாவின் ஆதரவு

Date:

இலங்கை எதிர்நோக்கும் நெருக்கடியிலிருந்து விடுபட்டு பொருளாதார ஸ்திரத்தன்மையை விரைவில் ஏற்படுத்துவதே கனடாவின் நம்பிக்கை என இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன் தெரிவித்துள்ளார்.

பொருளாதார ஸ்திரத்தன்மையை அடைவதற்கு கனேடிய அரசாங்கம் ஆதரவளிக்கும் என்றும் அவர் கூறுகிறார்.

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இன்று (26) பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸை பொது பாதுகாப்பு அமைச்சில் சந்தித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

இலங்கைக்கும் கனடாவுக்கும் இடையிலான இருதரப்பு இராஜதந்திர உறவுகள் தொடர்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.

இங்கு இலங்கையின் தற்போதைய நிலவரங்கள் மற்றும் அரசியல் ரீதியாக நடந்து வரும் பொதுமக்கள் போராட்டங்கள் குறித்து கருத்துக்கள் பரிமாறப்பட்டன.

கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கின்னன், எந்தவொரு சூழ்நிலையிலும் மனித உரிமைகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தியுள்ளார்.

Share post:

spot_imgspot_img

Popular

More like this
Related

தமிழக மீனவர்கள் 7 பேர் கைது

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து கடந்த 2 தினங்களுக்கு 400-க்கும் மேற்பட்ட...

பஸ் கட்டண திருத்தம்?

எரிபொருள் விலை திருத்தத்துடன் பஸ் கட்டண திருத்தம் தொடர்பாக அடுத்த 2...

கஹாவத்தை துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

கஹவத்த பகுதியில் நேற்று இரவு (30) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில்...

எரிபொருள் விலை உயர்வு

இன்று (30) நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய கூட்டுத்தாபனம்...