ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்ட தலைவராக இராஜாங்க அமைச்சர் சிறிபால கம்லத் நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொலன்னறுவை மாவட்டத் தலைமைப் பதவியிலிருந்து விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க விலக தீர்மானித்தமையே இதற்குக் காரணம்.
ரொஷான் ஜனாதிபதியின் தரப்புடன் நெருக்கமாகச் செயற்படுவதாகவும் ஐக்கிய தேசியக் கட்சியில் எதிர்கால அரசியலை தொடர உள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.